சுயநலவாதியின் டைரியிலிருந்து
Original price was: ₹200.00.₹180.00Current price is: ₹180.00.
Description
“போயும் போயும் அம்மா சேலையையா தற்கொலைக்கு தேர்ந்தெடுப்பேன் அவள் வாசனை தான் என் தற்கொலையை தள்ளிப் போட்டது” மீள முடியாமல் சிக்கிக் கொண்டேன் பிராங்க்ளினின் வரிகளில். இன்னும் இறுக்கமாக பிடித்துக் கொண்டேன் அம்மாளின் ஒவ்வொரு சேலையையும்.
– கவிஞர் க்ரிஷ் பாலா
தன் வாழ்வை தனக்காக வாழ்பவன், வாழ நினைப்பவன் சுயநலவாதியாக பிறரால் அடையாளப்படுத்தப்படுவான். ஆனால் அவனே தன்னை ஒரு சுயநலவாதியென்று எழுதிய நாட்குறிப்பு ஒரு கவிதை தொகுப்பாக நம்மிடம்…
– எழுத்தாளர் இனிதி
இக்கவிதை தொகுப்பு கவிஞர்களின் இயல்பான போக்கில் இருந்து மாறுபட்ட சிந்தனைகளோடு களம் இறங்குகிறது.
வாசகர்களுக்கு ஒரு வித்தியாசமான உணர்வை நிச்சயம் கொடுக்கும்.
– கவிஞர் மெஹராஜ் இஸ்மாயில்
எதார்த்தமான எதிர்பார்ப்புகள், அடிப்படை ஆசைகள், கடந்துவந்த ஏமாற்றங்கள், ஏற்றுப் பழகிய வலிகளின் கலவையாக இருக்கிறது இந்த ‘சுயநலவாதியின் டைரி… சுயநலவாதிகள் தான் சுயத்துடன் இருப்பார்கள் போலும்!
– அனீஸ் ஃபாத்திமா (இறைவி)
‘ஆறு மனிதர்களும் ஆறு தொலைபேசிகளும், சிக்னல், இதே உலகில் தான், அந்தரங்கம், நான் தான்’ போன்ற கவிதைகளை வாசிக்கும்போது மனதில், நிற்பதோடு நீங்கா இடமும் பிடிக்கின்றன.
– கவிஞர் சரண் பாபு
Additional information
| Weight | 0.25 g |
|---|---|
| Dimensions | 0.8 × 12 × 21.5 cm |
| Author | ப்ரான்க்ளின் AJ |
| Publisher | இறைவி வெளியீடு |
| Pages | 120 |
| Format | paperback |
| ISBN | 9789349765375 |



Reviews
There are no reviews yet.