நீலகண்டப் பறவையைத் தேடி…
Original price was: ₹410.00.₹397.00Current price is: ₹397.00.
Description
தமிழாக்கம்: சு.கிருஷ்ணமூர்த்தி
1961 முதல் 71 வரை பத்தாண்டு கால உழைப்பில் உருவானது இந்த நாவல் நூலாக வெளிவரும் முன் இதன் பதினெட்டு அத்தியாயங்கள் சிறுகதைகளாக வெளிவந்தன. ஆகவே அத்தியாயங்கள் தனித்து நிற்கக்கூடியவை. ஆயினும் ஒன்றோடொன்று நெருக்கமாக இணைந்தவை. நீலகண்டப் பறவையைத் தேடி ஒரே பாத்திரத்தையோ அல்லது அப்பாத்திரம் சம்பந்தப்பட்ட சம்பவங்களையோ மட்டும் வைத்துச் சொல்லப்படும் கதையல்ல; அது ஒரு பல்கோண ஆராய்ச்சியின் விளைவு. ரொமான்டிக் உணர்ச்சிப் பெருக்கு, குடும்பம் சீர்குலையும் பரிதாபம். பசி, பசிக்கு எதிரான போராட்டம், மதவெறி, மனித மதிப்பீடுகள் இவையெல்லாவற்றையும் காண்கிறோம்.
முந்தைய அதீன் பந்த்யோபாத்யாய, பிரிவினைக்கு இந்தியாவில் டாக்கா மாவட்டத்தைச் சேர்ந்த ராயினாதிக் கிராமத்தில் 1930ஆம் ஆண்டு பிறந்தார். இந்தியாவுக்கு வந்தபிறகு கற்றது வணிகத்துறைப் படிப்பு. சிறிது காலம் பத்திரிகை அலுவலகத்திலும் பணிபுரிந்தார் அவர். ஒரு கப்பலில் பயிற்சி பெறுவதற்காகச் சேர்ந்து, பல்வேறு துறைமுகங்களைப் பற்றி அனுபவம் பெற்று அதன் விளைவாக ‘சமுத்ரமானுஷ’ என்ற நாவலை எழுதினார். ‘நீலகண்டப் பறவையைத் தேடி…’ அவர் எழுதிய 22 நாவல்களில் குறிப்பிடத் தக்க நாவலாகும்.
சு. கிருஷ்ணமூர்த்தி, தமிழுக்கும் வங்க மொழிக்கும் பாலமாகத் திகழ்ந்தவர். நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டுள்ள கறையான், சிப்பியின் வயிற்றில் முத்து, தன் வெளிப்பாடு, திருமணமாகாதவள் . உள்ளிட்ட ஏராளமான நூல்களை தமிழாக்கம் செய்தவர்.
Additional information
| Weight | 0.6 g |
|---|---|
| Dimensions | 2.3 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 474 |
| Format | paperback |
| ISBN | 9788123779706 |



Reviews
There are no reviews yet.