பெண் கதைகள்
Original price was: ₹200.00.₹190.00Current price is: ₹190.00.
Description
1988ல் ஆனந்த விகடன் வார இதழில் கோபல்லபுரத்து மக்கள் தொடரினுள் இரண்டாம் பாகம் 6-வது அத்தியாயத்தில், ஊரிலுள்ள ஆண்களிடத்தில் இந்த செவ்வாய்கிழமை விரதம் பற்றி என்ன கருத்துக்கள் இருந்ததோ அதுதான் எனது கருத்தாகவும் இருந்தது! நாட்டார் கதைகளில் சரித்திரத்தைத் தேடக்கூடாது. அதே சமயத்தில் ஒரு ஓரையாக சரித்திரம், வைரத்தினுள் நீரோட்டமாகத் தெரியவும் செய்யும். இப்போது “தங்கத்தைத் தேடி” என்று ஒரு மனுசக் கூட்டம் அலைவதுபோல் பூர்வீக காலத்தில் “நெருப்பைத் தேடி” அலைந்ததாகவும், முதன் முதலில் பெண்கள் பேரில் ஆம்பிளைகளுக்கு சந்தேகம் ஆரம்பித்த ஒரு ஆஸ்திரேலியப் பழங்குடியினரின் கதை ஒன்று சொல்லுகிறது.
எப்படியோ, ஆண் பெண் பகைமை தொடங்கி பெண்ணை ஒடுக்கி, தலைமையை ஆண்கள் பறித்துக்கொண்டார்கள். பெண் இனத்தையே பட்டினிபோட்டு ஒடுக்கினார்கள். இந்தப் பொல்லாத பகைமை நீங்காமல்ப் போனால் மனு அழிந்தும் போகுஎன்ற நிலைமை ஏற்பட்டபோதுதான் நாட்டுப்புறக் கதைகளில் ஒரு அவ்வையார் வருகிறார். ஆண்களை வெல்ல பல தந்திர உபாயங்களைச் சொல்லித்தருகிறார். பெண் இனத்தைக் காப்பாற்றினாள். அவ்வையார் நோம்பு என்கிற செவ்வாய்க்கிழமை விரதம் தோன்றிய விதம் – கதை – இப்படித்தான். இந்த விவரங்களெல்லாம் எனக்குத் தெரியாத காலத்தில் எழுதியவைதான் இந்தத் தொகுதியில் உள்ள “பெண்” கதைகள். என்றாலும் இக்கதைகள் இப்பவும் படிக்க சுவாரசியமாக இருக்கின்றன.
ஒரு காலத்தில் நிலவிய பகைமை இருந்துவிட்டுப் போகட்டும். என்ன பகைமை இருந்தாலும் அவள் இன்றி நம்மால் இருக்க முடியுமா?
Additional information
| Weight | 0.25 g |
|---|---|
| Dimensions | 1 × 14 × 21 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 198 |
| Format | paperback |



Reviews
There are no reviews yet.