என் நினைவில் சே
Original price was: ₹300.00.₹285.00Current price is: ₹285.00.
Description
தமிழில்: அ. மங்கை
அலெய்டா மார்ச் முதல்முறையாக இந்த நூலில் தன்னுடைய துணைவரான எர்னஸ்டோ சே குவேரா பற்றி நினைவுகூர்கிறார்.
தங்களுடைய அற்புதமான காதலை. கியூபப் புரட்சிப் போரின்போது ஒரே குழுவைச் சேர்ந்த கொரில்லாக்களாக முதன்முதலாகச் சந்தித்துக் கொண்ட நாட்களில் தொடங்கி பத்து ஆண்டுகள் பூர்த்தியடையாத ஒரு காலகட்டத்தில், பொலிவியாவில் சே படுகொலை செய்யப்பட்டதைக் கேள்வியுற்ற துயரமான கணம்வரை அவர்கள் இணைந்து நடத்திய வாழ்க்கையினூடாக அவர் விவரிக்கிறார்.
இதை அலெய்டா, எதிர்காலத்திற்கும் தங்கள் குடும்பத்திற்கும் தங்களிடையே பகிர்ந்துகொண்ட அரசியல் கனவுகளைத் தீராத மோகமும் துயரமும் கொண்டு விவரிக்கிறார். நம் காலத்தின் மாபெரும் அரசியல் சின்னங்களுள் ஒன்றாகிவிட்ட ஒரு மனிதரின் வாழக்கை பற்றி இவ்வளவு நெருக்கமான ஒரு பார்வையை இதுவரை யாருமே வாசகர்களுக்கு அளித்ததில்லை.
அலெய்டாவிற்கு சே எழுதிய கடிதங்களும் கவிதைகளும் உணர்வெழுச்சி மிகுந்த சிறுகதையும் இந்த நூலில் இடம்பெறுகின்றன. அத்துடன் முன்பு எப்போதும் பிரசுரமாகாத குடும்ப ஆல்பத்திலிருந்து நிழற்படங்களும் இடம்பெறுகின்றன. இதில் சே அவருடைய இரகசிய பொலிவியா பயணத்திற்கு ஆயத்தமான போது மாறுவேடமிட்டு சேவும் அலெய்டாவும் எடுத்துக்கொண்ட இறுதிப் புகைப்படங்களும் அடங்கும்.
மேலும் இந்த நூல் உலகப் புகழ்பெற்ற புரட்சியாளர் ஒருவரின் மறைவிற்கு அஞ்சலி செலுத்திய லட்சக்கணக்கான மக்களின் மத்தியில் சாவதேச கவனத்தில் இருந்தவாறே. தன்னுடைய தனிப்பட்ட சோகத்தை எதிர்கொண்ட அலெய்டாவின் மனவலிமை, போர்ச் சூழல், வீரம், குழந்தைகளை வளர்க்க அவர் எடுத்துக்கொண்ட முயற்சி போன்றவற்றையும் வெளிக்கொணர்கிறது. இதன்மூலம் மாபெரும் புரட்சி நாயகனின் மற்றொரு பரிமாணத்தை நாம் புரிந்துகொள்ள உதவுகிறது இந்த நூல்.
Additional information
| Weight | 0.35 g |
|---|---|
| Dimensions | 1.2 × 14 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 194 |
| Format | paperback |
| ISBN | 9788177202007 |



Reviews
There are no reviews yet.