சே குவேரா என்ற புரட்சிக்காரன் உருவான கதை
Original price was: ₹300.00.₹270.00Current price is: ₹270.00.
Description
தமிழில்: ஜி.குப்புசாமி
1952ல் அல்பெர்தோ கிரனாடோ என்ற ஒரு இளம் மருத்துவரும் புயேனஸ் அய்ரெஸைச் சேர்ந்த கவுரவமிக்கதொரு குடும்பத்தைச் சேர்ந்த அவரது நண்பரான 23-வயது மருத்துவ மாணவர் எர்னெஸ்டோ குவேராவும் தமது கண்டத்தை சுற்றிப்பார்த்தறிய முடிவெடுத்தனர். அர்ஜென்டைனாவின் கொர்தொபா நகரிலிருந்து 1949ம் வருடத்தில் நார்டன் 500 CC மோட்டார் பைக்கில் சிலி, பெரு, கொலம்பியா மற்றும் வெனிசுவெலா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டனர். செல்லும் வழியில் தினக்கூலிகளாக, கால்பந்து பயிற்சியாளர்களாக, மருத்துவ உதவியாளர்களாக, சுமை தூக்கிகளாக என பல்வேறு வித வேலைகளை செய்தனர். தமது கண்டத்தின் பூர்வ குடிகளின் ஏழ்மையும், அவர்கள் ஏய்த்து சுரண்டப்படுவதும் அவர்களை மொத்தமாக மாற்றியது. இருவரும் தத்தமது பயணக்குறிப்புகளை எழுதுகின்றனர்.
அவர்களது பயணத்தில் கண்டவைகளும், அனுபவித்தவை களும் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்திருப்பதை பிற்காலத்தில் அல்பெர்தோ கிரனாடோ உணர்ந்தார். இது அல்பெர்தோவின் விஞ்ஞானியாகிற கனவை உறுதி செய்தது. எர்னெஸ்டோ என்கிற துடிப்பு மிக்க, விளையாட்டு மனப்பான்மை மிக்க மாணவனை சே என்ற கியூபாவின் விடுதலைக்குப் போரிட்டுவென்ற, சுதந்திரத்திற்கும் சமூக நீதிக்கும் போராடியதொரு கவர்ச்சி மிக்க போராளியாக மாற்றியது. இன்றுவரை லத்தீன் அமெரிக்காவின் தலை சிறந்த நாயகனாகவும், உலகின் மகத்தான புரட்சியாளனாகவும் சே திகழ்ந்து வருகிறார். சே-வின் மோட்டார் சைக்கிள் நாட்குறிப்புகளுக்கு துணை நூலாக அல்பெர்தோ கிரனாடோவின் இந்த நூல் திகழ்ந்து நெகிழ்ச்சியான, சிலமுறை நகைச்சுவையான சம்பவங்களை அந்தக் கவலையற்ற இரு இளைஞர்கள் தமது பயணத்தில் எதிர்கொண்டு தமது வாழ்வின் உண்மையான நோக்கத்தை கண்டறிந்தது பதிவு செய்யப்பட்டது.
Additional information
| Weight | 0.3 g |
|---|---|
| Dimensions | 1.4 × 14 × 21.5 cm |
| Author | அல்பெர்தோ கிரனாடோ |
| Publisher | வ.உ.சி நூலகம் |
| Pages | 240 |
| Format | paperback |



Reviews
There are no reviews yet.