தோட்டியின் மகன்
Original price was: ₹220.00.₹198.00Current price is: ₹198.00.
Description
தமிழில்: சுந்தர ராமசாமி
பொதுச் சமூகம் அருவருத்து ஒதுங்கிச் செல்லும் ஒரு தொழிலையும் அந்தத் தொழிலைச் செய்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருப்பவர்களையும் பற்றிய நாவல் ‘தோட்டியின் மகன்’. மலையாள நவீன இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரான தகழி சிவசங்கரப் பிள்ளை 1947ஆம் ஆண்டு எழுதிய நாவல் இது மலம் அள்ளும் தொழில் செய்யும் குடும்பத்தின் மூன்று தலைமுறையினரின் கதையை இது சித்தரிக்கிறது. அவர்களின் அன்றாட வாழ்க்கைப் பாடுகளையும் உளவியல் கூறுகளையும் தகழி துல்லியமாகச் சித்தரிக்கிறார். அவர்கள் உணர்வுகளும் வாழ்நிலையும் சமூகத்தில் அவர்களுக்கு இருந்த இடமும் நாவலில் பதிவாகியுள்ளன.
மலையாளத்தில் தலித் வாழ்வைப் பற்றிய படைப்புகளுக்கு முன்னோடியாக விளங்கும் இந்த நாவலைத் தமிழின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரான சுந்தர ராமசாமி தனது 21ஆவது வயதில், அவரது முதல் இலக்கியப் பணியாக, மொழிபெயர்த்திருக்கிறார். பாத்திரங்களின் பேச்சு வழக்கு உள்ளிட்ட மூல மொழியின் நுட்பங்களைச் சிறந்த முறையில் தமிழாக்கியிருக்கிறார்.
இன்றளவிலும் பெரிய மாற்றங்களற்ற துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்க்கையைச் சொல்லும் அற்புதமான படைப்பு இது.
Thakazhi Sivasankara Pilla, Sundara Ramasamy, Kalachuvadu
Additional information
| Weight | 0.25 g |
|---|---|
| Dimensions | 0.9 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 176 |
| Format | paperback |
| ISBN | 9788190080194 |



Reviews
There are no reviews yet.