பாவம், இவள் ஒரு பாப்பாத்தி!
Original price was: ₹90.00.₹85.00Current price is: ₹85.00.
Description
எப்போதோ ஒரு காலத்தில், நான் பத்திரிகைகளில் அறிமுகமாகாத எழுத்தாளனாய் இருந்தபோது ‘அம்மா’ என்று ஒரு நீண்ட கதை எழுதினேன்.
அக்காலத்தில் தொழிற்சங்கத் தலைவர்கள் தலைமறைவு வாழ்க்கையிலும், சிறைவாசத்திலும் கழித்தார்கள். அவர்கள் மீது சதி வழக்குகளும் பிடிவாரண்டுகளும் சுமத்தப் பட்டிருந்தன. அவர்களைப் போலீஸ்காரர்கள் ஈவு இரக்க மில்லாமல் நசுக்கினர். பலர் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பிடிபடு முன்பே இரையாகினர். சிலர் பிடிக்கப்பட்ட பின் அநாதைகளைப்போல் சுட்டுத் தள்ளப்பட்டனர். இவர்களைப் பற்றி முதல் தகவலாகவே இத்தகைய அதிர்ச்சி தரும் செய்திகளை நான் அறிந்ததற்குக் காரணம் அவர்களில் ஒருவனாய் நானும் அக்காலத்தில் வாழ்ந்ததுதான்.
இந்த அநுபவங்களினால் ஏற்பட்ட மனோநிலையில் அந்தக் கதையை நான் எழுதிய நண்பர்களுக்குப் படித்துக் காட்டினேன். அது மிகவும் பிரச்சாரத்தனமாக இருக்கிறது என்றும். கலையம்சமில்லாமல் கட்சிப் பிரச்சாரமாயிருக் கிறது என்றும் அப்போது பல நண்பர்கள் குறை கூறினர். எனக்கும் அப்படித்தான் தோன்றியது. அந்தக் கையெழுத் துப் பிரதி என்னவாயிற்று எனக்குத் தெரியவில்லை. அதை நான் மறந்தே போனேன்…
Additional information
| Weight | 0.1 g |
|---|---|
| Dimensions | 0.4 × 12 × 18 cm |
| Author | ஜெயகாந்தன் |
| Publisher | மீனாட்சி புத்தக நிலையம் |
| Pages | 112 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.