வென்வேல் சென்னி
Original price was: ₹2,600.00.₹2,340.00Current price is: ₹2,340.00.
Description
இதுவரை எழுதப்படாத மௌரியப் பேரரசன் சாம்ராட் அசோகனுக்கும், தமிழகத்தின் மூவேந்தர்களுக்கும் கி.மு. 261ல் நடைபெற்ற பெரும் போரே ‘வென்வேல் சென்னி’ புதினம்.
மௌரியரின் தமிழகப் படையெடுப்பிற்கும், மூவேந்தர்கள் மற்றும் வேளிர்கள் சேர்ந்து மொழிபெயர் தேயத்தில் நிலைநிறுத்தியிருந்த தமிழக கூட்டுப் படைகள் மௌரியரைத் தடுத்து நிறுத்திய பெரும் போருக்கும் வரலாற்றில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை.
கலிங்கப் போர் நடைபெற்ற பிறகு ஒன்றரை ஆண்டு காலம் கழித்தே அசோகன் தனது ‘தம்மா’ மதக் கொள்கையை அறிவித்தான், அசோகன் கலிங்கப் போரை முன்னெடுத்தது முதல் அவனது பௌத்த மதமாற்றம் நடைபெறும் வரை இடைப்பட்ட காலத்தில் தமிழகத்தில் நடைபெற்ற பெரும் போரே “வென்வேல் சென்னி” புதினம்.
சாம்ராட் அசோகன் மற்றும் கரிகாலன் புகழினால் வரலாற்றின் சுவடுகளிலிருந்து மறைந்து போன தமிழர்களின் வீர வரலாறே” வென்வேல் சென்னி”,
Additional information
| Weight | 2.8 g |
|---|---|
| Dimensions | 14.5 × 14 × 21.5 cm |
| Author | சி.வெற்றிவேல் |
| Publisher | வானதி பதிப்பகம் |
| Pages | 2680 |
| Format | Hard cover |
| ISBN |




Reviews
There are no reviews yet.