கொஞ்சம் தேநீர் நிறைய வானம்
Original price was: ₹100.00.₹90.00Current price is: ₹90.00.
Description
எனது கவிதை உலகம் விரிந்தது பரந்தது. இசங்கள் என்னும் பூட்டுகளால் பூட்டப்படாமல் திறந்தே கிடக்கிறது எனது கவிதைக்காடு. காற்றைப் போல் நீங்கள் அதில் எளிதே நுழைந்து எளிதே வெளிவரலாம். பிரபஞ்சம் முடியுமிடத்தில் எனது கவிதை தொடங்குகிறது ஆனால் பூமி தொடங்குமிடத்தில் முடிகிறது.
நட்சத்திரங்களைக் கொத்திச் சாப்பிட வேண்டுமென்று ஆகாயம் பறந்தாலும், பசிக்கும்போது தானியம் தின்னத் தரைக்கு வரும் பறவையைப் போல பிரபஞ்ச வெளியெல்லாம் பிரயாணப்பட்டாலும் எனது கவிதைப் பறவை மனித நேசம் என்ற தரைக்குத்தான் தாவி வருகிறது.
எந்தச் சித்திரம் வரையப்போனாலும் இயற்கை என்ற வண்ணக் கிண்ணத்தில் தன்னைத் தோய்த்துக் கொள்கிறது என் தூரிகை. இயற்கை என்பது நான் சித்திரம் தீட்டத் தொட்டுக்கொள்ளும் வண்ணமே தவிர, வண்ணமே சித்திரமல்ல. இந்த பூமியைப் பற்றிய வியப்பும், வாழ்வு குறித்த ருசியும் தீர்ந்துபோனால் கவிதை தீர்ந்து போகும். இந்த இரண்டும் தீராமல் காப்பவை என்னைச் சுற்றியிருக்கும் இயற்கையும் நான் சுற்றியிருக்கும் மனிதர்களும்தான்.
Additional information
| Dimensions | 0.2 × 0.8 cm |
|---|---|
| Author Name | |
| Publisher | |
| Pages | 115 |
| Format | Paper back |


