சிதம்பர ரகசியம்
Original price was: ₹255.00.₹242.00Current price is: ₹242.00.
Description
நெடுநாட்களுக்குப் பின்… அதாவது, மிகச் சரியாக 13 ஆண்டுகளுக்கு பிறகு ராஜேந்திரன் தன் சொந்த கிராமமான மகேந்திர மங்கலத்துக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தான். திருச்சி மாவட்டத்தில் காவிரிக் கரையோரமாக தொட்டியம் என்கிற ஊருக்கு முன்பாக இருக்கிறது மகேந்திர மங்கலம்.
ஒரு காலத்தில் மிகப் பசுமையான ஊர்.
தென்னை, நெல், கரும்பு, வாழை என்று பணப் பயிர் செழித்துக் குலுங்கும் பூமி. எல்லாம் காவேரித்தாயின் கருணை. இப்போது காவேரிக்கே கருணை காட்டப்பட வேண்டிய நிலையில் இருப்பதால், பழைய பசுமையெல்லாம் இல்லை. அதில் கடந்த சில வருடங்களில் காவிரித்தாய் ‘பாலைவனத் தாய்’ ஆகிவிட்டாள். அவள் மேனி மேல் கிடந்த மணலை எல்லாமும்கூட ஒரு கூட்டம் திருடிக்கொண்டு போய்விட்டது. அதனால், ஊரே வறண்டு, காய்ந்து கிடக்கிறது.
ஒரு மாதம் மழை பெய்தால்கூட ஊருக்கு பழைய பசுமை வராது. அப்படியொரு வறட்சி. அதனாலேயே… ‘ஊரில் இருக்கும் அந்த இரண்டரை ஏக்கர் நிலத்தை விற்றுவிட்டால் என்ன?’ என்கிற ஒரு எண்ணம் ராஜேந்திரனுக்கு தோன்றிவிட்டது- கூடவே ஒரு வீடும் உண்டு. அது இப்போது கந்தசாமி என்கிற குத்தகைத்தாரர் வசம் உள்ளது.
Additional information
| Weight | 0.3 g |
|---|---|
| Dimensions | 1.4 × 14 × 21.5 cm |
| Author | இந்திரா சௌந்தர்ராஜன் |
| Publisher | திருமகள் நிலையம் / விசா பப்ளிகேஷன்ஸ் |
| Pages | 256 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.