தம்மம் தந்தவன்
Original price was: ₹260.00.₹247.00Current price is: ₹247.00.
Description
தமிழில்: காளிப்ரஸாத்
யசோதரை பிள்ளைப்பேறுக்குப் பிறகான உறக்கத்தில் ஆழ்ந்திருந்தாள். அவள் நீண்டகாலமாக ஆழ்ந்து உறங்கவேயில்லை. இனி வருங்காலங்களிலும் நிம்மதியற்ற உறக்கமற்ற இரவுகள்தான் அவளுக்கு வாய்க்கப்போகிறதோ என்ற சந்தேகமே எழுகிறது.
சித்தார்த்தன் அவ்வறைக்குள் அமைதியாக நுழைந்தான். தன் மனைவியை எழுப்பும் எண்ணம் ஏதும் அவனுக்கு இல்லை. அவன் தன் மைந்தனைக் காணவே விரும்பினான். முதல்முறையாகவும்.. இறுதிமுறையாகவும்..
அவன் மஞ்சத்தருகே நின்றான். யசோதரையின் மஞ்சத்தில் பின்னாலிருந்து இளங்காற்று வீசிக்கொண்டிருந்தது. அவ்வசைவில் படுக்கையின் அருகே இருந்த எண்ணெய் விளக்கு அணைந்து போனது. அப்படியும் அங்கு போதிய வெளிச்சம் இருந்தது. அது அனைத்தையும் மங்கலாகக் காட்டியது. ஆனால் யசோதரை குழந்தையின் முகத்தைத் தன் கரங்களால் மூடிக்கொண்டிருந்தாள். சித்தார்த்தனுக்கு தன் மைந்தனைக் காண்பது இயலாதது ஆயிற்று.
அவள் தன் கரங்களை விலக்க நீண்டநேரமாகலாம். அவ்வளவு நேரம் அவனால் காத்திருக்க முடியாது.
அவன் திரும்பி நடக்கத் தொடங்கினான்.
Additional information
| Weight | 0.3 g |
|---|---|
| Dimensions | 1 × 14 × 21 cm |
| Author | விலாஸ் சாரங் |
| Publisher | நற்றிணை பதிப்பகம் |
| Pages | 208 |
| Format | paperback |
| ISBN | 9788194016267 |



Reviews
There are no reviews yet.