அதியமான் நெடுமான் அஞ்சி
Original price was: ₹400.00.₹380.00Current price is: ₹380.00.
Description
எழுத்தாளர் அசோக்குமார் வரலாற்றுப் புதினங்களைப் படைப்பதில் பேராளுமை கொண்டவர் என்பதை மீண்டும் நிரூபித் திருக்கிறார். வரலாற்று நாவல் நுட்பங்களில் மொழியின் செயல்பாடு மிக முக்கியம். ஔவையை வரவேற்கும் வார்த்தைகளில் தொடங்கும் இவரின் மொழி ஆதிக்கம், தேன்தமிழை ஔவையே முன்னிருந்து எழுதியதுபோல இன் தென்றலாகவும் கடும் புயலாகவும் சுழன்று இழுத்துச் செல்கிறது. காட்சிகளைச் சித்திரிக்கும்போதெல்லாம் அவை நம் கண் முன்னே விரிகின்றன.
அதியமான் ஔவைக்கு நெல்லிக்கனி தந்தது ஒரு வரிச் செய்தியல்ல; அது ஓர் அடையாளம். அதைக் கடந்து, அவன் ஆட்சிக்காலத்தில் எதிர்கொண்ட அரசியல், வாழ்வியல் விடயங்களை விரிவாகச் சித்திரிக்கும் இந்நாவலில் தத்துவங்களும் கவித்துவமான வாக்கியங்களும் ஒன்றை யொன்று விஞ்சுகின்றன.
போர்க்களத்தில் சமர் செய்யும் வீரர்களின் வினையாற்றலை, உடல்மொழியைக் காட்சிப் படுத்தும் மொழி மேலாண்மை மிக அரிதானது. எதிரியாயினும் சேரமானை மேன்மையானவனாகப் படைத்திருப்பது சிறப்பு. எழுத்தாளர் அசோக்குமார், தவிர்க் கவே இயலாத வரலாற்றுப் புதின ஆசிரியராகத் தமிழ் உலகில் என்றென்றும் வாழ்வார்.
– முனைவர் தமிழ்மணவாளன்
Additional information
| Weight | 0.4 g |
|---|---|
| Dimensions | 2 × 14 × 21.6 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 324 |
| Format | paperback |
| ISBN | 9788199128682 |



Reviews
There are no reviews yet.