ஆளண்டாப் பட்சி
Original price was: ₹300.00.₹285.00Current price is: ₹285.00.
Description
தந்தை குடும்ப நிலத்தைப் பாகப்பிரிவினை செய்வது முத்துவின் உலகைத் தலைகீழாகப் புரட்டிப் போடுகிறது. அவனுக்கென்று எதுவும் இல்லாமல் போகிறது. குடும்பத்துடனான அவனுடைய பிணைப்பும். சீராக்க முடியாத அளவு மோசமாகிறது. ஒருகாலத்தில் அவன் மிகவும் மதித்த அண்ணனின் அக்கிரமமான செயல்களால் மனம் வெறுத்துப்போகும் முத்து, தான் மிகவும் நேசிக்கும் தன்னுடைய உலகை விட்டு வெளியேறுகிறான். தனக்கும் தன் மனைவி, குழந்தைகளுக்குமான புதிய வாழ்க்கையைத் தேடிச் செல்கிறான்.
இடப்பெயர்வின் அனுபவங்களை முன்னிட்டு வாழ்வின் மாபெரும் மாற்றங்களைப் பற்றிப் பெருமாள்முருகன் இந்த நாவலில் பேசுகிறார். நிலைத்தன்மையை எய்துவதற்கான நமது தீராத வசீகரத்தின் பலவீனமான இயல்பை முத்துவின் அலைதலினூடே ஆராய்கிறார். ஆளண்டாப் பட்சி என்னும் கற்பனைப் பறவையைக் குறியீடாகக் கொண்டு வாழ்வின் நிலையற்ற தன்மையை நம் கண் முன் நிறுத்துகிறார். சிந்தனையைத் தூண்டும் வகையில் சிறப்பாக எழுதப்பட்டுள்ள இந்த நாவல், நிலையற்ற உலகில் நிலைத்தன்மையைத் தேடும் ஒரு மனிதனின் கதையை அற்புதமாகச் சித்திரிக்கிறது. நிரந்தரம் நாடும் மானுட விழைவை ஆழமாக அலசுகிறது.
Additional information
| Weight | 0.3 g |
|---|---|
| Dimensions | 1.1 × 14 × 21.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 248 |
| Format | paperback |
| ISBN | 9789381969557 |



Reviews
There are no reviews yet.