கிராதம் – வெண்முரசு
Original price was: ₹1,100.00.₹935.00Current price is: ₹935.00.
Description
வேதங்கள் உருவாவதற்கு முந்தைய காலங்களை கனவுகளாகவும், உருவகங்களாகவும் முன்வைக்கிறது கிராதம். வருணனை முதல் தேவனாகக் கொண்ட தொல்வேத காலம் முதல் இந்திரனை முதல் தெய்வமாகக் கொண்ட வேதம் எழுவது வரையிலான காலம், நாராயணனை முதல் தெய்வமாகக் கொண்ட நாராயணவேதம் எழும் தொடக்கம் இதிலுள்ளது.
அதை அர்ஜுனனின் பயணங்களாக இது சித்தரிக்கிறது. வேத முதல்வனிடமிருந்து பாசுபத வேதத்தை அர்ஜுனன் பெறும்போது நிறைவடைகிறது. பாண்டவர்களில் அர்ஜுனனுக்கே கீதை உரைக்கப்பட்டது. அவனே வில் வழியாக யோகியானவன். இந்நாவலில் வருவது நாராயண வேதத்தின் உச்சத்தைக் கேட்கும் இடம் நோக்கி அவன் செல்லும் பயணமும்கூட. வேதம் எங்கிருந்தெல்லாம் ஊறியிருக்கக்கூடும் என ஆய்வாளர்கள் எண்ணுகிறார்களோ அங்கெல்லாம் அவன் பயணம் நிகழ்கிறது. ஆளுமையின் அனைத்து வடிவங்களிலும் அமைந்து அறிந்து அவன் மீள்வதே இதன் கதை.
உலகக் காப்பிய வரலாற்றில் மாவீரர்களின் பயணங்களை மெய்ஞானப் பயணங்களாகச் சித்தரிப்பது பொதுவான வழக்கம். ஒருபக்கம் எளிய வீரகதையாகவும் மறுபக்கம் அகப்பயணமாகவும் தோன்றும் ஒரு கதையாடல் தொன்மைக்காலம் முதலே இங்கு இருந்துள்ளது. அந்த காவியப்போக்கு கொண்ட நாவல் இது.
Additional information
| Weight | 1.1 g |
|---|---|
| Dimensions | 5 × 15 × 23.2 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 942 |
| Format | paperback |
| ISBN | 9788184938180 |



Reviews
There are no reviews yet.