சித்தார்த்தன்
Original price was: ₹170.00.₹153.00Current price is: ₹153.00.
Description
தமிழில்: திருலோக சீதாராம்
சித்தார்த்தனுடைய நாட்டமெல்லாம் சூன்யத்தை நோக்கித்தான், தாகம் விருப்பம், கனவு, மகிழ்ச்சி துயர் இவை எதுவுமே அற்ற சூன்யம் நான் என்பது அறவே அழிந்த பாழ்.
‘நான்’ எனும் முனைப்பற்று விடுபட்ட உள்ளத்தின் அமைதியைக் துய்க்க,தூய சிந்தனையின் சுகத்தில் திளைக்க வேண்டுமென்பதே அவனது இறுதி இலட்சியம். தன் முனைப்பு வெல்லப்பட்டு அழிந்து போகும் போது, ஆபாசங்கள் அவிந்து அடங்கிய பேரமையில், நான்ற உண்மையின் உண்மை, மகாரகசியம், இறுதிப் பொருள், தன்னுள் விழிப்புற்றே தீர வேண்டும்.
எரிக்கும் வெயிலில் சித்தார்த்தன் மௌனமாக நின்று வலி, தாகம் இவற்றைப் பொறுத்துக் கொண்டான். வலியும் தாகமும் பொருட்டல்லாது போகும் வரையில் அவன் அப்படி நின்றான். மழையிலும் அவன் அமைதியாய் நின்றான். தலையில் விழும் மழைத் தண்ணீர் சிகை வழியே சொட்டித் தோள்களைத் தழுவி, மரத்துப் போன முழங்காலில் விழுந்து கால்களைக் கழுவிச் சென்றது. குளிர் நடுக்கம் ஓய்ந்து, தோள்களும் கால்களும் துவட்சியற்று விரைந்து நிலைகொள்ளும் வரையிலும் அந்தத் தவசி மழையில் நின்றான். மெளனமாய் முட்களிற் சென்று முடங்கினான். நொந்து நலிவற்ற தோளிலிருந்து இரத்தம் சொட்டியது. இரணமாகிவிட்டது. வலியும் குத்தலும் உறைக்காமற்போம் வரையில் பீறிடும் குருதி நிற்கும் வரையில், ஆடாமல் அசையாமல் கிடந்தான் சித்தார்த்தன்.
நாவலிலிருந்து…
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 1 × 14 × 21.6 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 162 |
| Format | paperback |
| ISBN | 9789349539167 |



Reviews
There are no reviews yet.