புதர் மூடிய ஒருவன்
Original price was: ₹350.00.₹332.00Current price is: ₹332.00.
Description
பச்சைக் குளத்தில் மிதக்கும் கண்களைக் கொண்ட கரிசல்பட்டி சம்சாரியின் வாரிசுகள் கண்கள் உலர்ந்து பச்சை நிறமிழந்து கரிசல்பட்டியிலிருந்து நாலாதிசைகளிலும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். உயரமான ஆலமர உச்சியில் இருந்துகொண்டு நாலாதிசைகளிலும் தனது ஏக்கத்தைப் பரவவிட்டுக்கொண்டிருக்கிறது கரிசல்பட்டிக் குருவி, தொண்ணூறுகளில் ஒரு மயில்கூடத் தட்டுப்படாத தாமிரபரணியின் கரைப்பகுதிகளில், பிழைப்புத் தேடி வந்த நான் கரிசல்பட்டியில் இருக்கிற மயில்களை எண்ணிப் பெருமிதம் அடைந்திருக்கிறேன். இரண்டாயிரத்துக்குப் பிறகான காலங்களில் என்னை மாதிரியே மயில்களும் கரிசல்பட்டியை வெறிச்சோட வைத்துவிட்டு தாமிரபரணிக் கரைகளில் கரிசல்பட்டி ஆலமரம் மாதிரியான பிரம்மாண்ட மரங்களைத்தேடி அலுத்து அலைகின்றன. கரிசல்பட்டியின் ஏக்கங்களோடு நெல்லைச் சீமையின் வயல்களில் உலா வருகின்றன மயில்கள். பெய்யாத ஒரு சொட்டு மழை நீர் கரிசல்பட்டியை ஜீவனற்ற ஊராக மாற்றியிருக்கிறது. சீமைக்கருவேலப் புதர்களில் தேனீக்களற்ற மெழுகான தேன் கூடுகள் காய்ந்து உலர்ந்து கொண்டே தேனீக்களின் வருகைக்காக காத்திருக்கின்றன.
கடிதம் எழுத முடியாத. அப்பாவைத் திட்டிக்கொண்டிருந்த அம்மாவியின் வெள்ளந்தியான அன்பை – பேரக்குழந்தைகள் உணர முடியாத அம்மாவின் பூச்சிகளின் வீடு உள்ளே வைத்துக்கொண்டு, பேசுவதற்கான ஆட்களைத்தேடி வெயிலில் மௌனித்திருக்கிறது.
Additional information
| Weight | 0.65 g |
|---|---|
| Dimensions | 2.5 × 16.4 × 23.8 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 392 |
| Format | Hard cover |
| ISBN |



Reviews
There are no reviews yet.