பூப்பு நீராட்டு விழா தேவையா?
Original price was: ₹50.00.₹49.00Current price is: ₹49.00.
Out of stock
Description
பெண்ணுடலைப் பற்றி குறிப்பாக அவள் உடலிலிருந்து குருதி/உதிரம் வெளிப்படுவது, குழந்தைகள் பிறப்பது பற்றிய காரணங்கள் பிடிபடாது, வியப்பும். அச்சமும், பிரமிப்பும் மட்டுமே நிலவிய காலந் தொடங்கி, முதல் குருதி வெளிப்பாடு பெண்ணுடல் மறு உற்பத்திக்கு ஆணின் பங்களிப்பும் தேவை என்ற புரிதல் ஏற்படுவதற்கு. மனித அறிவு நீண்ட காலத்தை எடுத்துக் கொண்டது.
பிரமிப்பின் புதிர்கள் விடுபட, ஆண் தந்திரசாலியானான். அவளுடைய உடலை அவளுக்கே அந்நியமாக்கிவிட்டு, அதைத் தனக்குச் சொந்தமாக்கிக்கொள்ள, தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர, ஆணுலகு மேற்கொண்ட பல்நோக்குக் கட்டமைப்புகள், சொல்லாடல்கள்தாம் கன்னி, கற்பு, பதிவிரதை போன்றவை.
இந்தப் புனித உயர்வுகளோடு அவளை வீட்டிற்குள் முடக்கி வைத்து, தன் உயர்வை நிலை நாட்டினான். இந்தப் புனிதங்கள் உடைபடவேண்டும்; உடைக்கப்பட வேண்டும். அப்படிச் செய்கின்ற தகுதியும், வல்லமையும் கல்வி ஒன்றிற்கே உண்டு. படித்த பெண்கள் இத்தகைய விழாக்களை வெறுப்பதும் மறுப்பதும் நாமறிந்த உண்மைகள் உண்மைக்கல்வி ஒன்றினால் மட்டுமே குனிந்திருக்கும் பெண்ணை நிமிரச் செய்ய முடியும். இழிசொல்லையும் பழிச்சொல்லையும் துடைத்தெறிய முடியும் . இரட்டை அளவுகோல்களை உடைத்தெறிந்து தூள்தூளாக்க முடியும்.
– அணிந்துரையில் பேராசிரியர் சரசுவதி
Additional information
| Weight | 0.15 g |
|---|---|
| Dimensions | 0.5 × 14 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 96 |
| Format | paperback |



Reviews
There are no reviews yet.