உரைநடைத் தமிழில் ஐம்பெரும் காப்பியங்கள்!
Original price was: ₹120.00.₹114.00Current price is: ₹114.00.
Description
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி. குண்டலகேசி என்ற இந்த ஐந்தும் ‘ஐம்பெரும் காப்பியங்கள்’ எனப்படும். இவை கி.பி இரண்டாம் நூற்றாண்டு முதல் ஏழாம் நூற்றாண்டு வரை எழுதப்பட்டவையாகும்.
இவை பெரும்பாலும் சமண, பௌத்த சமயங்களைச் சார்ந்தவை எனலாம். இவற்றில் திருக்குறளின் கருத்துக்கள் விரவியுள்ளன. செல்வ நிலையாமை, இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை ஆகிய மூன்றும் இவற்றில் வலியுறுத்தப்படுகின்றன. ஆகவே மக்கள் அறவாழ்க்கையில் வாழ இவைகள் வழி செய்கின்றன.
இந்தப் பகுதியில் உள்ள நூல் ஒவ்வொன்றும் இரண்டு பகுதி களாகப் பிரிக்கப்படுகிறது. முதல் பகுதியில் கதைச் சுருக்கம் உள்ளது. இரண்டாம் பகுதியில் ஆசிரியர் வரலாறு, நூல் வரலாறு, பாத்திரப் படைப்பு, நூலின் சிறப்பு அம்சங்கள் முதலியவை விளக்கப்பட்டுள்ளன.
வாசகர்கள் படித்துப் பயன் பெறுவார்களாக, இந்நூலைச் சிறந்த முறையில் அச்சிட்டு வெளியிட்ட நர்மதா பதிப்பக உரிமையாளர் திரு . இராமலிங்கம் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 1.2 × 12 × 18 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 208 |
| Format | paperback |
| ISBN | 9789386433558 |



Reviews
There are no reviews yet.