கங்கை எங்கே போகிறாள்?
Original price was: ₹200.00.₹180.00Current price is: ₹180.00.
Out of stock
Description
எனது வாசகர்களில் மிக அதிகமானவர், அதி சந்தர்ப்பங்களில், பல தடவை பரிச்சயம் கொண்ட நாவல் “சி நேரங்களில் சில மனிதர்கள்” அந்த நாவலில் வருகிற கங்கா எனக்கே ஒரு கதாபாத்திரம் என்ற எல்லையை மீறி வாழ்க்கையில் பிரவேசிக்க முயல்கிற மாதிரி உயிர் பெற்றெழுகின்ற பாத்திரம தோன்றுகிறது.
“அக்கினிப் பிரவேசம் என்ற சிறுகதையில் பெயர் கட அவசியமில்லாத ஒரு ‘அவளா’ய்த் தோன்றிக் கங்கையில் சங்கமிக்கிறவரை ஒரு முழு வாழ்வு பெற்ற, பூரணத்துவம் பெற்ற ஒரு பாத்திரம் ஒரு விசேஷமான விபரீதமான யுகத்தில் தோன்றிய இந்தியப் பெண்களின் பிரதிநிதி இவளை ஒரு விரக்தியுற்ற வாழ்வின் உறுத்தல்களை மறக்க முயல்கிற மனோவியாதிக் காரியாகத்தான் “சில நேரங்களில் சில மனிதர்கள் நாவ விட்டிருந்தேன். அது அவளுடைய முடிவாகிவிடுவதில் வாசகர்களுக்கோ எனக்கோ துளிக்கூடச் சம்மதமில்லாதிருந்தது. போலும்
யோசித்துப் பார்த்தால், அதுவே ஒரு முடிவாகிவிட கூடாது ஒரு பெண்ணுக்கோ, ஆணுக்கோ வாழ்க்கையில் விரக்தியும் சோகமும் முடிவாகிவிட்டாலுங்கூட, அப்படியொரு விரக்தியில் ஒருவரின் வாழக்கை முடிவு பெற்று விடுவதை மனிதமனம் கொண்டோர் விரும்ப முடியாதுதான் என்பதை நானும் உணர்ந்தேன். சுங்கா கதையில் மட்டுமல்லாது கதாசிரியனுக்கும் ஒரு பிரச்சனையாகிப் போனாள்!
திணமணி கதிரில் தொடர்கதையாகச் சிநே.சி மனிதர்கள் நாவலை எழுதி முடிக்கும் போது ‘காலத்தின் அலைகளால் ஏற்றுண்ட, மோதி மூழ்கிய, போக்கில் மிதந்த, எதிர்த்து ஓய்ந்த ஓர் ஆத்மாவின் கதை இது’ என்று இறுதியாகக் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் இந்த முத்தாய்ப்புக்கு வரவேண்டுமானால் இன்னும் சொல்லப்பட வேண்டியது இவள் வாழ்க்கையில் நிறைய இருக்க வேண்டும் என்று என்று எனக்கே தோன்றியது. அவ்வாறு நிறைய நிறைய இவளைப் பற்றி யோசிக்க யோசிக்க எனக்கு மிகுந்தது.
எனக்குக் கதைகளை அல்ல; கதைக்கு ஆதாரமான வேர்களும் வித்துக்களுமான கதைமாந்தர்களைப் பற்றியும், வாழ்க்கைப் பிரச்சனைகளைப் பற்றியும் யோசித்துக் கொண்டிருப்பது மிகுதியும் பயன்தருகிறது. அந்த யோசனைகள் குருட்டாம் போக்கான கற்பனைகள் அல்ல அவை சமூகத்தோடும் என்னோடும் சம்பந்தப்பட்ட என் கால வாழ்வுப் பிரச்சனைகள், என்பதால் அவற்றை யோசித்ததனாலேயே நான் பெரும் பயனடைகிறேன். எனவேதான் என்னை எழுதச் சொன்னால் அவற்றைப் பற்றியே தொடர்ந்து, பன்னிப் பன்னி எழுதுவதில் நான் சலிப்படைவதேயில்லை.
சில நேரங்களில்”.. நாவலை ஒரு முழுமை என்று எல்லாரும் ஏற்றுக் கொண்டுவிட்ட பிறகுச் சாஹித்ய அகாடமி பரிசு தந்து விட்ட பிறகு (முடிவு பெறாத நாவலுக்கு அகாடமிக்காரர்கள் பரிசு தருவதில்லை) அதைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பகுதியாக இன்னொரு நாவலை நான் எழுதத் துணிந்தேன் எனில் ஒரு கதை, சமகாலமாந்தரைப் பற்றிய கதை, அவர்கள் உயிருடன் உள்ளவரை முடிந்து போனதாகாது என்பதால் மட்டுமல்ல; அந்தப் பாத்திரங்கள் பாதியில் விரக்தியுற்ற, குறைபட்ட, வடுப்பட்டவர்களாக இறுதியடையலாகாது எனும் நல்லெண்ணமே ஆகும். இந்த நல்லெண்ணம் ஏதோ காருண்ய உணர்ச்சியால் எழுந்தது அல்ல வாழ்க்கை பற்றி நற்கருத்தும், நல்ல சித்தாந்தமும் உடையோர் தவிர்க்க வொண்ணாத தர்மம் அது. விரக்தியும், துன்பமும் வாழ்க்கையில் ஓர் இடைநிலைத் தோற்றம் தானே தவிர அதுவே இறுதியல்ல; முடிவு அல்ல என்ற கருத்துடையவர்கள். ‘கலை உருவத்துக்காகவும்’ ‘புதுமைக்காகவும் ‘ஒரு மாற்றத்துக்காகவும் தப்பான செய்திகளை, அவ நம்பிக்கையை, விதைத்து அறுவடை செய்கிற முடிவுகளுக்குத் தங்கள் படைப்புகளை மனமொப்பித் தாரை வார்த்துவிட முடியாது
அவ்விதமான ஒரு முடிவினை முதல் பாகத்தில் இறுதியாகவும், இரண்டாம் பாகத்துக்கான ஆரம்பமாகவும் கொண்டது முழுமையான கதையோட்டத்தின் நடுவே நிகழ்ந்த இடைநிலைத் தோற்றமாயிற்று சில நேரங்களில் சிலமனிதர்களின் இரண்டாம் பாகமே ‘கங்கை எங்கே போகிறாள்?’ எனினும் முன்னதை எழுதும் போது இரண்டாவது பற்றிய எண்ணமே எனக்கிருந்ததில்லை என்பதைச் சொல்லிவிட வேண்டும்.
ஏற்கனவே இன்னொரு பத்திரிகையில் முதல் பாகத்தை எழுதி முடித்து ஐந்தாண்டுகளுக்குப் பிறகு மற்றுமொரு பிரபலமான பத்திரிகையில் வேறொரு தலைப்பில் இரண்டாம் பாகத்தை எழுதுகிற ‘மரபை’ எனக்கு முன் வேறு யாரும் செய்திருப்பதாகத் தெரியவில்லை. இது ஒரு சிறப்பு எனின் அதற்கு முழுப் பொறுப்பும் குமுதம் பத்திரிக்கைக்குச் சேர வேண்டும் என்று விரும்புகிறேன்.
வாசகர்களுக்கும், பதிப்பகத்துக்கும் எனது வழக்கமான நன்றி என்றும் உண்டு.
Additional information
| Weight | 0.2 g |
|---|---|
| Dimensions | 1.2 × 12 × 18 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 252 |
| Format | paperback |



Reviews
There are no reviews yet.