தீண்டப்படாதவர்கள் யார்? காரணமும்.. சூழ்ச்சியும்…
Original price was: ₹225.00.₹203.00Current price is: ₹203.00.
Description
சமூக சீர்கேடுகளின், விபரீத விளைவுகளின் வெளிச்சத்தில். பகைப்புலனில் பார்க்கும்போது. இந்து நாகரிகம் என்பது ஒரு நாகரிகம் என்று அழைப்பதற்கே அருகதையற்றதாகிவிடுகிறது?
மனித குலத்தின் ஒரு பகுதியை இவ்வாறு அடக்கி ஒடுக்கி அடிமைப்படுத்துவது என்பது கொடிதினும் கொடிதான. பேய்த்தனமான. அவமானகரமான ஒரு சூழ்ச்சியாகும். அப்பட்டமான வஞ்சகமாகும். பெரும்பழி, குரூர அவமதிப்பு என்பது தான் இதற்குச் சரியான பெயராக இருக்கமுடியும்.
குற்றமிழைப்பதை ஓர் அங்கீகரிக்கப்பட்ட வாழ்க்கைத் தொழிலாக ஏற்றுக்கொள்ளும்படி போதிக்கப்படுகின்ற ஒரு மக்களைத் தோற்றுவித்திருக்கும் ஒரு நாகரிகத்தைப் பற்றிவேறு என்ன சொல்லமுடியும்?
நாளுக்கு நாள் வளர்ந்தோங்கிவரும் நாகரிகத்துக்கு இடையே பண்டைக்கால காட்டு மிராண்டித்தனமான வாழ்க்கை வாழும் அவல நிலைக்கு, இழிநிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மற்றொருவகை பிரிவு மக்களை உருவாக்கி இருக்கும் ஒரு நாகரிகத்தைப் பற்றி வேறு என்ன கூறமுடியும்?
இதேபோன்று, மனித உறவுக்கு, சமூகக் கூட்டுறவுக்கு அப்பாற்பட்டவர்களாக, தொட்ட மாத்திரத்திலேயே தீட்டு ஏற்படுத்திவிடக் கூடியவர்களாக மிக மிக இழிவானவர்களாக. ஈனமானவர்களாக நடத்தப்படும் மூன்றாவதொரு வகைப் பிரிவு மக்களைப் படைத்திருக்கும் ஒரு நாகரிகத்தைப் பற்றி வேறு என்ன சொல்ல முடியும்’
Additional information
| Weight | 0.3 g |
|---|---|
| Dimensions | 1.2 × 14 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 216 |
| Format | paperback |
| ISBN | 9789393724991 |



Reviews
There are no reviews yet.