பதினெண் புராணங்கள்
Original price was: ₹750.00.₹699.00Current price is: ₹699.00.
Description
புராணமும் சரித்திரந்தான் என்றாலும் அது பாப புண்ணியங்களில் ஜனங்களுக்கும் பாடம் கற்பித்து அவர்களை நர்மததில் செலுத்தும்படியான வரலாறுகளை மட்டும் ஸெலக்ட் பண்ணிக் கொடுக்கிறது.
தாமசாலிகளாக இருந்ததால் அந்த ஜன்மாவிலேயே உயர்வை அடைந்தவர்கள் யாரோ, தாமத்தை விட்டதால் அந்தப் பிறவியிலேயே கெடுதலை அடைந்தவர்கள் யாரோ, அப்படிப்பட்டவர்களின் கதைகளையே புராணங்கள் பெரும்பாலும் ‘ஸெலக்ட் பண்ணி நமக்குக் கொடுக்கின்றன.
அடுத்த ஜனமாக்களைச் சொல்லி அதில் பாத்திரங்கள் பாப புண்ணிய பலன்களை அடைந்ததைச் சொல்லுகின்றன. பாப புண்ணிய பலன்களில் நம்மைச் சேர்க்கத புராணக் கதை எதுவுமே கிடையாது. ஆகையால், நல்லவர்களாக இருந்து நல்ல காரியங்களைச் செய்து நன்மையை அடைந்தவர்களுடைய சரித்திரங்களை நாம் படித்தால் நாமும் அப்படியிருக்க ஒரு தூண்டுகோலாக இருக்கும். கெட்டவர்களாக இருந்து உலக க்ஷேமத்துக்குக் கேடு பண்ணிக்கொண்டு முடியில் அதைவிடககஷ்டம் அடைந்தவர்களுடைய கதைகளைப் படிப்பதால் நாம் அந்த வழியில் போகாமல் லகானை இழுத்த மாதிரி இருக்கும்” என்பதாகச் சரித்திரப் படிப்புக்குப் பிரயோஜனம் சொல்வதானால், இந்தப் பிரயோஜனத்தை வாஸ்தவத்தில் புராணத்தினால்தான் செய்ய முடிகிறது.
‘நல்லது கெட்டவைகளைப் பற்றி நமக்கு ஒருவிதமான பாடமும் கற்பிக்காமல் வெறுமே கால வாரியாக பல ராஜாக்கள் ஆண்டதையும் சண்டை போட்டதையும் சொல்க வேண்டியதில்லை. நாம் வாழ்க்கையில் எடுத்துக் கொள்ளும்படியான உபதேசம் இல்லாத சரித்திரம் நமக்கு வேண்டாம். ஆத்ம லாபமான சரித்திரங்களையே சொல்வோம்’ என்ற அபிப்பிராயத்தோடு புராணங்கள் எழுதப்பட்டிருக்கின்றன.
Additional information
| Weight | 1.6 g |
|---|---|
| Dimensions | 5.2 × 19 × 25.5 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 640 |
| Format | Hard cover |
| ISBN | 9789386209702 |



Reviews
There are no reviews yet.