வெண்ணிற இரவுகள் + கடலும் கிழவனும்

Original price was: ₹100.00.Current price is: ₹99.00.

Only 67 item(s) left in stock.
  ... people are viewing this right now

  Share

Description

தமிழில்: ரா. கிருஷ்ணய்யா
தஸ்தாயெவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள் 1848இல் வெளியானது, இந்தக் கதையின் நாயகனுக்குப் பெயர் கிடையாது. காரணம் அது நீங்களாகவோ நானாகவோ இருக்கக்கூடும். காதலிப்பவனுக்குப் பெயர் எதற்காக? ஆனால் காதலிக்கப்படும் பெண்ணிற்குப் பெயர் நிச்சயம் வேண்டும். காதலியின் பெயரை உச்சரிக்கும்போது அது ஒளிரத் துவங்கிவிடும். கதையின் வழியே நாஸ்தென்காவை நாமும் காதலிக்கத் துவங்கிவிடுகிறோம்.
வெண்ணிற இரவுகள் என்பதற்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளன. ஒன்று உறக்கமில்லாத இரவு. மற்றது இரவிலும் சூரியன் ஒளிரக்கூடிய இரவு. கோடைக்காலத்தில் பனிப்பிரதேசங்களில் இது போல நிகழ்வதுண்டு. கண்ணாடியில் பட்டு ஒளி பிரதிபலிப்பதைப் போல நாஸ்தென்காவின் முன்னால் அவனது ஆசைகள் ஒவ்வொன்றாக வெளிப்படுகின்றன. காதல் அவனைப் பித்தாக்குகிறது. தன்விருப்பமில்லாமல் மேலும் கீழும் அலையும் மணற்கடிகாரத்தின் மணற்துகளைப் போல அவன் உருமாறுகிறான். தனிமைதான் அவனைக் காதல் கொள்ள வைக்கிறது. தனிமைதான் அவனை ஆற்றுப்படுத்துகிறது.
பீட்டர்ஸ் பெர்க் நகரின் பகலும் இரவும் காதலின் ஒளியாலே நிரம்பியிருக்கிறது. வெண்ணிற இரவுகளின் வழியே நாஸ்தென்காவின் நிழலைப் போல நாமும் அவள் கூடவே செல்கிறோம். அவளைக் காதலிக்கிறோம். அவளால் காதலிக்கப்படுகிறோம். அவளுக்காகக் காத்திருக்கிறோம். காதலால் மட்டுமே வாழ்வை மீட்டெடுக்கமுடியும் என்று அந்தக் கனவுலகவாசி நம்புகிறான். காதலின் உன்னதக் கனவைச் சொன்ன காரணத்தால் தான் இணையற்ற காதல்கதையாக வெண்ணிற இரவுகள் கொண்டாடப்படுகிறது.
– எஸ். ராமகிருஷ்ணன்

தமிழில்: ச.து.சு.யோகியார்
மீன்பிடி நுட்பங்கள் என்பது இக்கதையில் ஒரு தளம், அதைத்தாண்டி இக்கதை வாழ்க்கையை, அதன் இரக்கமற்ற தன்மையை, உறவுக்கான ஏக்கமும் வெல்ல முடியாத தனிமையையும், விளிம்புகளற்று நிரம்பியிருக்கும் சூனியத்தையும், வாழ்வின் நோக்கம் / சாரம் என்றும் நாம் சாதித்தவை என்றும் இறுமாந்திருக்கும் அனைத்தையும் கடித்துக் கிழிக்கும் கோரைப் பற்கள் கொண்ட காலத்தின் கருணையற்ற அகோர முகத்தினைக் காட்டும் கதை என்றும் வாசிக்கலாம். மனிதனும் இயற்கையும் கொள்ளும் உறவைப் பற்றிய தத்துவ விசாரணையாகவும் அணுகலாம். வேகமும் போட்டியும் நிறைந்த இவ்வுலகில் தன் அடையாளத்தை நிலைநாட்டத் துடிப்பவனின் கதை என்றும் சொல்லலாம். விவிலியப் படிமங்களை ஹெமிங்வே இக்கதையில் பெருவாரியாகப் பயன்படுத்தியிருக்கிறார். விவிலியத் தளத்திலும் ஒரு வாசிப்புச் சாத்தியம் தான். அவ்வளவு ஏன் பலனை எதிர்நோக்காத கர்மம் எனும் கீதையின் சாரத்தைச் சொல்லும் கதையாகக் கூட இதை வாசிக்க முடியும்.
– சுனில் கிருஷ்ணன்.

Vennira, VenniraH, Vennnira, Vennniraa, WENNIRA, Vennirah, Venniraa, Vennirra, Vennera, Vennniraaa, Iravugal, Iravukal, IravugalH, Iravukalh, Iravughal, Eeravugal, Iravugall, Iravughal, IravugaaL, Iravugazhl, Kadalum, Kadlum, Kizhavanum, Kizavanum, Kizhvaanum, Kizhwanum, kilavan, kelavan, kezhavan, Ernest Hemingway, The, Old, Man, Sea, Ernest Hemingway, Tamizhveli, S. T. S. Yogiyar, Fyodor Dostoevsky, R. Krishnaiah, MI Veliyeedu

Additional information

Weight 0.25 g
Dimensions 1.2 × 14 × 21.4 cm
Author Name

,

Publisher

Pages

208

Format

paperback

ISBN

9789392543494

Reviews (0)

0.00
0 reviews
5
0
4
0
3
0
2
0
1
0
Be the first to review “வெண்ணிற இரவுகள் + கடலும் கிழவனும்”

Your email address will not be published. Required fields are marked *

This field is required.

This field is required.

This field is required.

Reviews

There are no reviews yet.

My Cart
Wishlist
Recently Viewed
Categories