அசோகமித்திரன் சிறுகதைகள் (2 பாகம்)
Original price was: ₹1,975.00.₹1,777.00Current price is: ₹1,777.00.
Description
தமிழின் முதன்மையான சிறுகதையாளர்களில் ஒருவரான அசோகமித்திரன் எழுதிய அனைத்துக் கதைகளும் அடங்கிய பெருந்தொகை இந்நூல் 1956 முதல் 2017வரை அனுபத்தோராண்டுகளாக எழுதிய கதைகள் இரண்டு தொகுதிகளாக வெளிவருகின்றன.
பெரிய கதையொன்றின் சிறுசிறு பகுதிகள்தாம் என் கதைகள்” என்று கூறும் அவர், தான் எழுதிய இச்சிறிய கதைகளின் வாயிலாக என்றுமே எழுதி முடிக்க முடியாத அந்தப் பெரிய கதையான ‘வாழ்வின்’ பக்கங்களை நமக்குப் புரட்டிக் காட்டுகிறார். முழுவதுமாகப் புரிந்துகொள்ள முடியாத அக்கதையினை நாம் பகுதிபகுதியாக வாசித்துக்கொண்டிருக்கும்போதே. ஏதோ ஒரு தருணத்தில் அது நம்மைப் பற்றிய கதையாக மாறிவிடுவதும் அசோகமித்திரன் கதைகளில் இயல்பாக நடந்தேறுகிறது.
தனி அனுபவங்களாக மட்டும் சுருங்கிவிடாமல், சுதந்திரத்திற்கு முன்னும் பின்னுமாக நீளும் ஒரு காலகட்டத்தின் சமூகப் பண்பாட்டு வரலாற்றைக் குறிப்புணர்த்தும் புனைவுகளாகவும் விரிவுகாட்டி நிற்பவை அசோகமித்திரனின் கதைகள்.
Additional information
| Weight | 2 g |
|---|---|
| Dimensions | 9.6 × 15.5 × 23 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 1658 |
| Format | paperback |
| ISBN | 9789352440146 |



Reviews
There are no reviews yet.