உலக அரங்கில் இந்தியா
Original price was: ₹400.00.₹308.00Current price is: ₹308.00.
Description
இந்திய வெளியுறவுக் கொள்கையின் தலைமைச்சிற்பி என்று பெருமையோடு அழைக்கப்படும் ஜவஹர்லால் நேருவால் உருவாக்கப்பட்டது இந்திய வெளியுறவுக் கொள்கை’. இந்தியாலின் ‘வெளியுறவுக் கொள்கை’ எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானித்தவரும், அதற்கு அடித்தளமிட்டவரும் தேருவே ஆவார்.
நாட்டின் இறையாண்மை, உலகில் உள்ள பல்வேறு சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து செயல்படுதல், ஆதிக்க சக்திகளுக்கு எதிராக குரல் கொடுத்தல், உலக நாடுகளுக்கிடையேயான பிரச்சினைகள், தேவைகள், எதிர்ப்பார்ப்புகள் ஆகியவற்றை பேச்சு வார்த்தைகள் மூலம் சுமூகமாக தீர்க்க உதவுதல் போன்றவை நம் ‘இந்திய வெளியுறவுக் கொள்கையின்’ அடிப்படை நோக்கங்கள்.
இந்திய வெளியுறவுக் கொள்கை’யின் முக்கிய உட்கூறு களையும், அடிப்படை காரணிகளையும் கொண்டு ‘உலக அரங்கில் இந்தியா எனும் தலைப்பில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பாதுகாப்புத் தேவைகளைக் கருத்தில் கொண்டு. உலக நாடுகளுடன் தொடர்பு கொள்வது பற்றி இந்தியாவின் நிலையை தெளிவுபடுத்த கொண்டு வரப்பட்ட கூட்டு சேராக் கொள்கை முதல் – இந்தியாவும் சீனாவும் திபெத் பற்றி செய்து கொண்ட ஒப்பந்தத்தில் வடிவம் கொடுக்கப்பட்ட பஞ்சசீலக் கொள்கை, அணு ஆராய்ச்சி அமைதிக்காக பயன்படுத்தப்பட வேண்டும் என்று உணர்த்தும் அணு ஆயுதக் கொள்கை போன்ற பல கொள்கைகளையும், ஆசிய நல்லுறவு மாநாடு, பாண்டுங் மாநாடு எனப் பல மாநாடுகள் மற்றும் அதன் விவாதங்களையும் ஆசிரியர் வரிசைப்படுத்தியிருக்கிறார்.
மேலும், உலக அளவில் ஏற்படுத்தப்பட்டுள்ள கூட்டமைப்பு நிறுவனங்களான ஆப்பிரிக்கக் கூட்டமைப்பு (AU) ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு (ASEAN) பொது நல அமைப்பு (Common Wealth) தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பு (SAARC) போன்ற பல நிறுவனங்களின் அமைப்பு, பணிகளையும் விளக்கியிருக்கிறார். உலக அளவில் பொருளாதாரத்தைப் பேணி வரும் உலகவங்கி, பன்னாட்டு பண நிதியம், உலக வர்த்தக நிறுவனம் பற்றிய பல தகவல்களை பதிவு செய்திருக்கிறார்.
Additional information
| Weight | 5.5 g |
|---|---|
| Dimensions | 2.2 × 14.2 × 21.4 cm |
| Author Name | |
| Publisher | |
| Pages | 520 |
| Format | paperback |
| ISBN |



Reviews
There are no reviews yet.